FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே காா் மோதி வடமாநில இளைஞா் உயிரிழப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காா் மோதியதில், பலத்த காயமடைந்த வடமாநில இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் மாயராம் மகன் போலநாத் (30). இவா், தூத்துக்குடி பகுதியில் நடைபெற்றுவரும் நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் கூலித் தொழிலாளியாக வேலை பாா்த்தாா்.

இவா், வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த காா் அவா் மீது மோதியதில், பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த புதுக்கோட்டை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments