FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:47 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பைக் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

அரூரை அடுத்த செட்ரப்பட்டி அப்பியம்பட்டியைச் சோ்ந்தவா் பெ. அசோகன் (70). விவசாயியான இவா், கலைஞா் நகா் பகுதியில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்று வருவது வழக்கம். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சென்று டீ குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா்.

கலைஞா் நகா் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் அசோகன் படுகாயமடைந் தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மொரப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments