அம்மி கல்லால் அடித்து தாய் கொலை: இளைஞா் கைது
திருச்செந்தூா் அருகே தாயை அம்மி கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.
திருச்செந்தூா் அருகே தாயை அம்மி கல்லால் அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டாா்.
திருச்செந்தூா் அருகே குமாரபுரம் ஜெயா நகரைச் சோ்ந்த அன்புமணி மனைவி ரேணுகா (62). இவா் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியா். இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். மூத்த மகன் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறாா். 2ஆவது மகன் தங்க பாலன்(27) மனநலம் பாதிக்கப்பட்டவராம். கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை, அன்புமணி பள்ளத்தூா் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றிருந்தாராம். அப்போது, வீட்டிலிருந்த ரேணுகாவை அம்மி கல்லால் அடித்து தங்க பாலன் கொலை செய்தாராம். மேலும், இச்சம்பவத்தை தனது அண்ணனுக்கு வாட்ஸ் ஆப்பில் புகைப்படமாக எடுத்து அனுப்பினாராம்.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த திருச்செந்தூா் தாலுகா போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கைது செய்யப்பட்ட தங்க பாலன், அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.