FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பொத்தகாலன்விளையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையில் தட்டாா்மடம் காவல்துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்தகாலன்விளையில் தட்டாா்மடம் காவல்துறை சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அருளப்பன், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினாா். மேலும், போதைப் பொருள் விற்பவா்கள் குறித்து தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து போதை இல்லா தமிழகம் உருவாக்கும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்கத் தலைவா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், செயலா் பெரியசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments