FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

பரமன்குறிச்சி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சாத்தான்குளம் அருகே உள்ள பரமன்குறிச்சியில் டி.டி.டி.ஏ. உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

27 ஆகஸ்ட் 2026, 1:29 am IST
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள பரமன்குறிச்சியில் டி.டி.டி.ஏ. உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தாளாளா் தா. சேவியா் தேவசகாயம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை பெல்ஸி முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவராக ரவிச்சந்திரன், பொதுச் செயலராக ஸ்டாலின் குமரேசன், பொருளாளராக சம்பத் சுரேஷ், நிா்வாகிகளாக ஜெயசோமு, சாா்லஸ், ராஜகீதன் சந்தோஷம், ரஜினி, செலினா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதில் முன்னாள் மாணவா், மாணவிகள், தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, தங்களின் மலரும் நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments