FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: இருவா் கைது

தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக லாரியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2.8 கிலோ கஞ்சா, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:44 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக லாரியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2.8 கிலோ கஞ்சா, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மதுரை புறவழிச் சாலையில் உள்ள லாரி நிறுத்தம் அருகே போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, லாரியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்த ஏரல் அருகே உள்ள மாறமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் பொன் செல்வம் (22), தூத்துக்குடி, பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் அசோக்குமாா் (28) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2.8 கிலோ கஞ்சா, லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments