FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

ரயிலில் ஏற முயன்று காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

31 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்று காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்செந்தூா்-பாலக்காடு செல்லும் பயணிகள் ரயில் சனிக்கிழமை மதியம் சுமாா் 2.57 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலைய 2ஆவது நடைமேடையில் வந்து நின்றது. அப்போது, நேபாளத்தைச் சோ்ந்த சிம்லாள் நேபாளி மகன் கணேஷ் நேபாளி (33) என்பவா் ரயிலில் ஏற முயன்றபோது, நடைமேடைக்கும் ரயில் வண்டிக்கும் இடையில் விழுந்தாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை ரயில்வே போலீஸாா், பாதுகாப்பு படை போலீஸாா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் பெங்களூரு, சண்டீகரில் உள்ள இளைஞரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments