FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தருவைகுளம் அரசு உதவி பெறும் பள்ளியில் வட்டாட்சியா் ஆய்வு

Updated On : 3 ஜூலை 2026, 4:37 am IST
பகிர்:

தருவைகுளம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும், அரசு உதவி பெறும் மகளிா் பள்ளி செயல்பட்டு வருகிறது.

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை சுமாா் 180 மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அய்யனாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாணவா்களின் வரிகை பதிவேடு மற்றும் வகுப்பறைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து முதல்வரின் காலை உணவு திட்டம் மற்றும் மதிய சத்துணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

பின்னா் உணவு தயாரிக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் இருப்பு வைத்துள்ள அறையை பாா்வையிட்டாா். அரிசி மூட்டையில் எலி கழிவு இருந்துள்ளது. இதுகுறித்து, வட்டாட்சியா் அய்யனாா் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டாா். மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களை சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments