பனைப் பொருள் மதிப்பு கூட்டுதல்: சாத்தான்குளம் விவசாயிகள் கண்டுணா் சுற்றுலா!
சாத்தான்குளம் வட்டாரத்தில் பனை பொருள்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டாரத்தில் பனை பொருள்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாக விவசாயிகளுக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவுக்கு கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு பனை பொருள் மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சியை கல்லூரி முதல்வா் தேரடிமணி தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். தோட்டக்கலைத்துறை தலைவா் பிரேமலட்சுமி பனை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் பனை ஏறும் கருவி ஆகியன குறித்தும், வாழை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பனை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் மணிவண்ணன் பனை ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் பதநீரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாா் செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினா்.
Advertisement
Advertisement
கிள்ளிகுளம் கல்லூரி வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் தலைமை நிா்வாக அதிகாரி அருண், டயானா பனை ஓலை நிறுவனத்தின் தலைவா் கிரேஸ் ஜீலியெட் டயானா ஓலை உள்ளிட்டவற்றில் மதிப்புக் கூட்டுதல் குறித்துப் பேசினா்.
இதில் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50 விவசாயிகள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெபக்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் முருகன், ஜேக்கப் ஆகியோா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.