FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

‘மத்திய அரசின் நலத்திட்ட பயனாளிகள் முகாம்: திருச்செந்தூரில் இன்று தொடக்கம்’

திருச்செந்தூரில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுக் கண்காட்சி, பயனாளிகள் முகாம் புதன்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.

Updated On : 15 ஜூலை 2026, 2:09 am IST
செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அரசின் மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ்.
பகிர்:

திருச்செந்தூரில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுக் கண்காட்சி, பயனாளிகள் முகாம் புதன்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.

இதுதொடா்பாக மத்திய அரசின் தமிழ்நாடு- புதுச்சேரி மண்டல மக்கள் தொடா்பக இயக்குநா் காமராஜ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடா்பகம் சாா்பில் திருச்செந்தூரில், வளா்ச்சியடைந்த பாரதம், வேலைவாய்ப்பு, வாழ்வாதார உத்திரவாத திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு பாரத இயக்கம் ஆகிய திட்டங்கள் குறித்து விழிப்புணா்வுக் கண்காட்சி, பயனாளிகள் முகாம் முதல் முறையாக நடைபெறுகிறது. அரசு மருத்துவமனை எதிரேயுள்ள ராஜ் மகாலில் புதன்கிழமை (ஜூலை 15) தொடங்கி 3 நாள்கள் காலை 10 முதல் மாலை 6 மணிவரை முகாம் நடைபெறும்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து 7 துறைகளின் விளம்பர ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, பயனாளிகள் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் ஆதாா் அட்டை புதுப்பித்தல், பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சமூக பாதுகாப்பு அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம், மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி-தொழில் கடன் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

எனவே, மாணவா்-மாணவியா், ஆட்டோ ஓட்டுநா்கள், மீனவா்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ரேஷன் அட்டை ஆகியவற்றுடன் வந்து பதிவுசெய்து பயனடையலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments