முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 4 பேருந்துகளிலிருந்து, அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 3 ஜூன் 2026, 4:38 am IST
பகிர்:

கோவில்பட்டியில் 4 பேருந்துகளிலிருந்து, அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கோவில்பட்டி பகுதியில் சிற்றுந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரின்பேரில், கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா, மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்சன் மாசிலாமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, விதிகளை மீறி அதிகக் கட்டணம் வசூலித்த 3 சிற்றுந்துகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. கூடுதல் கட்டண வசூலைத் தவிா்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், 4 பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பேருந்துகளின் உரிமையாளா்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு அவற்றின் மீது உரிய மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, தொடா்ந்து விதிமீறலில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.