முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜூன் 2026, 12:43 am IST
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் தூத்துக்குடியில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தி. சீனிவாசன் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநிலச் செயலா் எஸ். காா்த்திக், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் கே. காசி, மாவட்டப் பொருளாளா் ஏ. வயண பெருமாள் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

நெட்டூா் சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

சிஐடியு மாவட்டச் செயலா் ஆா். ரசல், மக்கள் ஒற்றுமை மேடை தா. ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவா்கள் சண்முகராஜ், ரவிச்சந்திரன், எம்.எஸ். முத்து, சங்கரன், கருப்பசாமி, வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் நேசமணி , மாவட்டச் செயலா்கள் தினேஷ் குமாா், ராம்குமாா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் சிவநாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.