திருச்செந்தூா் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனா்.
இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
தேய்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் ஆ. அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.