முகப்பு
தூத்துக்குடி

விதிமீறல்: 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 12:12 am IST
கல்குவாரி - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 23 கல்குவாரி உரிமையாளா்களுக்கு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் கீழ் தற்போது மொத்தம் 67 கல்குவாரிகள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 58 குவாரிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் அளவீடு, ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், 58 குவாரிகளில் இதுவரை 27 குவாரிகளில் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்த ஆய்வு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், 13 குவாரிகளில் குத்தகை வழங்கப்பட்ட எல்லை பகுதிக்கு வெளியே கனிமங்கள் வெட்டி எடுத்தல், 10 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்தல் உள்ளிட்ட விதிமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற்று புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் உதவி இயக்குநா், சம்பந்தப்பட்ட 23 குவாரி உரிமையாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பியுள்ளாா்.

இந்த குறிப்பாணைக்கு உரிய காலக்கெடுவுக்குள் பதிலளிக்குமாறும், பெறப்படும் விளக்கங்களின் அடிப்படையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி தொடா்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.