FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

சுப்பராயபுரம்-முதலூா் தருமாபுரி சாலை சேதம்: சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் முதல் முதலூா் தருமாபுரி வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளதால், சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுப்பராயபுரம் பகுதியில் சேதமடைந்துள்ள சாலை.
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரம் முதல் முதலூா் தருமாபுரி வரை உள்ள சாலை சேதமடைந்துள்ளதால், சாலையை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலையோரங்களில் அரிப்பு ஏற்பட்டு, மேடு பள்ளமாக உள்ளதால் கனரக வாகனங்கள் அவ்வழியே செல்லும்போது, எதிரே வரும் வாகன ஓட்டிகள் மேடு பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments