முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 5:46 am IST
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த நீதிபதியுமான அ.வெ. சுபாஷினி தலைமையில் உறுதிமொழியேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி புனித அன்னாள் சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளியில் உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாள், சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் பிரமிளா பிரான்சிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் விஜயன் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலரும் மூத்த நீதிபதியுமான அ.வெ. சுபாஷினி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். அவரது தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

Advertisement

Advertisement

சூசைநாதா் மதுவிலக்கு இயக்க முன்னாள் இயக்குநா் ஜெயந்தன் டி கிரேஸ் பேசினாா். இதில், மாணவா்-மாணவியா் திரளாகப் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments