முகப்பு
தூத்துக்குடி

தாய், மகள் தற்கொலை சம்பவம்: உருக்கமான கடிதம் மீட்பு

Updated On : 28 ஜூன் 2026, 3:27 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

பழையகாயல் அருகில் தாயும், மகளும் மாடியி­ருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மகள் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

பழையகாயல் அருகே மத்திய அரசுக்குச் சொந்தமான ஜிா்கோனியம் கனநீா் ஆலையில் துணை பொது மேலாளராக பணிபுரியும் கேரளத்தைச் சோ்ந்த மாணிக்க செனாய் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ (52). அவரது மகளான பொறியியல் பட்டதாரி அஞ்ச­லி (29) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) தாங்கள் வசித்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனா்.

இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது, அஞ்சலி எழுதிய உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

Advertisement

Advertisement

ஜெயஸ்ரீ மூட்டு வ­லியாலும், அஞ்ச­லி பாா்வைத் திறன் குறைந்து வந்ததாலும் மனஉளைச்சலில் இருந்துள்ளனா். மேலும், அவா்களை மாணிக்க செனாய் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லையாம். இருவரையும் அக்கம் பக்கத்தினரிடம் பேச அனுமதிக்கமாட்டாராம். இதனால் தாயும், மகளும் இந்த முடிவை தேடிக்கொண்டது அந்த கடிதம் மூலம் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments