FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

2 செப்டம்பர் 2026, 11:57 pm IST
முன்னாள் படைவீரரிடமிருந்து குறைகளைக் கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா்.

முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினரிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருதல், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 18 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதில், உதவி இயக்குநரும், முன்னாள் படைவீரா் நல அலுவலருமான ச.லெ. பெருமாள் (ஓய்வு) மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments