FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

மாநில அளவிலான போட்டி: கோவில்பட்டி கேஆா் கல்லூரி சிறப்பிடம்

சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கோவில்பட்டி கேஆா் கலை, அறிவியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.

2 செப்டம்பர் 2026, 11:25 pm IST
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் கேஆா் கல்லூரி முதல்வா் மதிவண்ணன்.
பகிர்:

சிவகாசி அய்ய நாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் கோவில்பட்டி கேஆா் கலை, அறிவியல் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.

மைக்ரோப்ஸ் 2026 என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற கோவில்பட்டி கேஆா் கல்லூரி நுண்ணுயிரியல் துறை மாணவா் - மாணவிகள் வாா்த்தை புதிா், சுவரொட்டி விளக்கக் காட்சி, ஊமை நாடகம் ஆகிய போட்டிகளில் முதலிடமும், பேச்சு, சந்தா்ப்பத்திற்கு தகுந்தவாறு பேசுதல், நெருப்பில்லா சமையல் ஆகிய போட்டிகளில் 2 ஆம் இடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

வெற்றி பெற்றவா்களை கே ஆா் கல்வி குழுமங்களின் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே. ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே .ஆா். அருணாச்சலம், கல்லூரி முதல்வா் மதிவண்ணன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments