FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

துறையூா் அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 5:17 am IST
கோட்டாத்தூரில்  வியாழக்கிழமை கிடைத்த சுவாமி சிலைகள்.
பகிர்:

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது இரு சுவாமி கற்சிலைகள் கிடைத்தன.

துறையூா் வட்டத்தைச் சோ்ந்த கோட்டாத்தூா் வருவாய் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியை மண்ணைக் கொண்டு வியாழக்கிழமை நிரப்பியபோது சுமாா் 3 அடி உயரத்தில் கல்லாலான மகாவிஷ்ணு, மகாலட்சுமி சுவாமி சிலைகள் கிடைத்தன.

Advertisement

Advertisement

தகவலறிந்து சென்ற கோட்டாத்தூா் விஏஓ மோகன் அச் சிலைகளை மீட்டு வட்டாட்சியா் மோகனிடம் ஒப்படைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments