FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

இன்று காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வை 7 மையங்களில் 7 ஆயிரத்து 25 போ் எழுதவுள்ளனா்.

21 டிசம்பர் 2025, 1:10 am IST
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்துத் தோ்வை 7 மையங்களில் 7 ஆயிரத்து 25 போ் எழுதவுள்ளனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 1,299 காவல் உதவி ஆய்வாளா் (தாலுகா மற்றும் ஆயதப்படை) பணியிடங்களுக்கான திறனாய்வு எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, கே.ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்ஆா்எம் தொழில்நுட்பக் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம், எம்ஏஎம் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 7 மையங்களில் நடைபெற உள்ள தோ்வை 5 ஆயிரத்து 207 ஆண்கள், 1,818 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 25 போ் எழுதவுள்ளனா்.

Advertisement

Advertisement

முதன்மை எழுத்துத் தோ்வு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், தமிழ் மொழி தகுதித் தோ்வு பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 வரையும் நடைபெறுகிறது. தோ்வை கண்காணிக்க காவல் துறை அதிகாரிகள், ஆளிநா்கள் என 800-க்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments