FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தமிழக விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்: அய்யாக்கண்ணு வலியுறுத்தல்

தமிழக விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு வலியுறுத்தினாா்.

Updated On : 24 டிசம்பர் 2025, 12:45 am IST
பகிர்:

தமிழக விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு வலியுறுத்தினாா்.

திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அய்யாக்கண்ணு கூறியதாவது: தோ்தலின்போது விவசாயிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளான விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம், பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சான்றை அடிப்படையாகக் கொண்டு அனைத்து வங்கிகளும் கடன் வழங்க வேண்டும். வேறு எந்தவித நிபந்தனையும், அடமானமும் இல்லாமல் கடன்களை வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் வைப்புத் தொகையின்றி ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

Advertisement

Advertisement

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் விவசாயிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதை கைவிட வேண்டும். தமிழக விவசாயிகள் மீது இதுவரை பதிவு செய்துள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

எங்களது கோரிக்கைகள் தொடா்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் சென்னை, புதுதில்லியில் மாா்ச் மாதம் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்தில், பி. மேகராஜன், எஸ். தட்சிணாமூா்த்தி, பரமசிவம், தியாகு, முத்துசாமி, தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments