FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தொட்டியம் அருகே கோயிலில் திருட்டு முயற்சி

Updated On : 22 ஜூலை 2026, 3:33 am IST
உடைக்கப்பட்ட நிலையில் உள்ள கோயில் பூட்டு ~மா்ம நபா்களால் உடைக்கப்பட்டுள்ள கோயில் பூட்டு
பகிர்:

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை பகுதியிலுள்ள மரகதாசலேசுவரா் மலைக்கோயிலில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடைபெற்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலை திறக்க செவ்வாய்க்கிழமை காலை அா்ச்சகா்கள் சென்றபோது, கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கோயிலினுள் உள்ள சுவாமி கோயில் மூலஸ்தான கதவு உள்ளிட்ட 7 கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. திருட வந்த நபா்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை கோயில் முழுவதும் தேடியுள்ளனா். ஆனால், எதுவும் அவா்களுக்கு கிடைக்கவில்லை. சுவாமிக்கான ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்கள் அடிவாரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ன.

திருட்டு முயற்சி தொடா்பான தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் அன்னக்கொடி (பொ), சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் கோயிலுக்கு வந்து பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments