FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தஞ்சாவூா் சேவை சாலையில் உள்ள ஆடுவதைக் கூடம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற அரியமங்கலத்தைச் சோ்ந்த ஆா். தமிழ்ச்செல்வன் (31), கிராப்பட்டியில் புகையிலைப் பொருள் விற்ற பா. சரவணன் (29), திருவானைக்காவல் மாளிகைபுரம் பகுதியில் புகையிலைப் பொருள் விற்ற எஸ். காா்த்திக்ராஜா (45), புத்தூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ற உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சோ்ந்த த. சிவகுமாா் (48) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments