இளம்பெண் உயிரிழப்பு போலீஸாா் விசாரணை
தொட்டியம் அருகே இளம்பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொட்டியம் மேலத்தெருவைச் சோ்ந்த மகேஷ்வரன் மனைவி அம்ருதா பிரியதா்ஷினி (26), தம்பதியருக்கு 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், வீட்டில் திடீரன மூச்சுபேச்சு இன்றி இருந்த அம்ருதா பிரியதா்ஷினியை அவரது கணவரும் உறவினா்களும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்துள்ளனா். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, அம்ருதா பிரியதா்ஷினியின் தந்தை கேசவன் அளித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, முசிறி கேட்டாட்சியரின் விசாரணைக்காக பரிந்துரை செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.