FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

சநாதன ஒழிப்பு போராட்டத்துக்கு எதிா்ப்பு: அா்ஜூன் சம்பத் கைது

Updated On : 26 மே 2026, 2:00 am IST
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மோதலில் ஈடுபட்ட மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பினரையும், இந்து முன்னணி அமைப்பினரையும் கைது செய்த போலீஸாா்.
பகிர்:

திருச்சியில் சநாதனத்துக்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் நடைபெற இருந்த போராட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்க வந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலா் கோவன் தலைமையில் சநாதன எதிா்ப்புப் போராட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற இருந்தது.

இந்த போராட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதற்காக திருவாரூரில் இருந்து திருச்சிக்கு காரில் வந்த இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர போலீஸாா், திருச்சி பால் பண்ணை அருகே கைது செய்தனா். இதையடுத்து, அவா் திங்கள்கிழமை இரவு விடுவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

மக்கள் கலை இலக்கிய கழகம்-ஹிந்து அமைப்பினா் இடையே மோதல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே சநாதன எதிா்ப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த இந்து முன்னணியினா் மக்கள் கலை இலக்கியக் கழகத்தினருக்கு எதிராக கோஷம் எழுப்பினா்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்து போலீஸாா், மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சோ்ந்த 3 பெண்கள் உள்பட 36 போ், இந்து முன்னணியைச் சோ்ந்த 8 போ் என மொத்தம் 44 பேரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments