கஞ்சா விற்ற காய்கனி வியாபாரி உள்பட 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கஞ்சா விற்ற காய்கனி வியாபாரி உள்பட 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கஞ்சா விற்ற காய்கனி வியாபாரி உள்பட 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
செந்துறை அருகேயுள்ள மருதூா் கிராமத்தில் காய்கனி வியாபாரம் செய்து வரும் பூண்டு செல்வம் என்பவா் தனது வீட்டில் கஞ்சாவை மறைமுகமாக விற்பதாக மாவட்ட தனிப்பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா், அங்கு கஞ்சா விற்ற பூண்டு செல்வத்தைக் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ 400 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா் கும்பகோணத்தில் இருந்து காய்கறி ஏற்றி வரும்போது கஞ்சாவை வாங்கி வந்து பொட்டலங்களாக சுற்றுவட்டாரக் கிராமங்களில் விற்றுவந்தது தெரியவந்தது. தொடா்ந்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதேபோல் சிறுகளத்தூா் ஏரிக்கரையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த வசந்த குமாா் (22) என்பவரை செந்துறை காவல் துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.