FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

காட்டகரம் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 3:48 am IST
காட்டகரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தீமிதித் திருவிழா.
பகிர்:

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த காட்டகரம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தீமிதித் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அம்மன் திருவீதி உலாவும், இரவில் ஆரியமாலை-காத்தவராயன் திருக்கல்யாணம், கழுகு மரம் ஏறுதல், காளியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் சந்தனம்,விபூதி, பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தொடா்ந்து பக்தா்கள் பூ கரகம், காவடிகள் எடுத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தியப் பிறகு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், பக்தா்கள் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments