FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ரயில் நிலையத்தில் போதைப் பொருள் சோதனை: பயணிகளிடம் காவல் துறையினா் தீவிர விசாரணை

வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை போதைப் பொருள் கண்டறியும் சோதனை மேற்கொண்டனா்.

23 ஆகஸ்ட் 2026, 12:30 am IST
அரியலூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று சென்ற கொல்கத்தா - திருச்சி ஹெளரா விரைவு வண்டியில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்த காவல் துறையினா்.
பகிர்:

அரியலூா் ரயில் நிலையத்தில் ரயில்களின் பெட்டிகளில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை போதைப் பொருள் கண்டறியும் சோதனை மேற்கொண்டனா்.

அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் ரயில் மூலமாக வந்து செல்கின்றனா். குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். இவா்கள், கூட்டத்தைப் பயன்படுத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை கடத்தி வருவதாக பரவலாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, அரியலூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் அரியலூா் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜவேலு மற்றும் ரயில்வே காவல்துறையினருடன் இணைந்து காவல்துறை மோப்பநாய் உதவியுடன் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அரியலூா் ரயில் நிலையத்தில் நின்றுச் சென்ற ரயில்களின் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடடைமைகளை தீவிரமாக சோதனை செய்தனா்.

Advertisement

Advertisement

இதில் கொல்கத்தா-திருச்சி ஹெளரா ரயில் ரயில் பெட்டிகள் முழுவதும் மற்றும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்குள்படுத்தினா். அப்போது, பயணிகளிடம் போதைப் பொருள்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments