FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில், அரசு கலைக் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 12:30 am IST
அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா், அரியலூா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் சித்ரா.
பகிர்:

அரியலூரில், அரசு கலைக் கல்லூரி சாலை பாதுகாப்பு சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் காவல் துறை சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா், அக்கல்லூரி முதல்வா் சித்ரா ஆகியோா் மாணவ,மாணவிகளின் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

பேரணியானது, ராஜாஜி நகா், இருசு குட்டை, செந்துறை சாலை வழியாக பேருந்து நிலையம் வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

பேரணியின் போது, சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம், தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், போக்குவரத்து விதிகளை மதிப்பது, பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவ,மாணவிகள் முழக்கமிட்டவாறு சென்றனா்.

பேரணியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் சாலைராம் சக்திவேல், அரியலூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேஸ்வரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அக்கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலரும், சாலை பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளருமான வெ. கருணாகரன் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments