FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

சத்துணவு அமைப்பாளரிடம் 4 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு அமைப்பாளரிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 18 ஜூலை 2026, 1:02 am IST
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சத்துணவு அமைப்பாளரிடம் 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இடையாறு கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மனைவி தேவி (36). கட்சிப்பெருமாள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் இவா், வெள்ளிக்கிழமை மாலை ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சத்துணவு ஊழியா் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, இடையாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சூரியமணல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், தேவி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

Advertisement

Advertisement

புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments