முகப்பு
அரியலூர்

விவசாய கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய 5 போ் கைது

Updated On : 15 ஜூன் 2026, 4:44 am IST
ஜெயசூா்யா
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே விவசாய கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செந்துறையைச் சோ்ந்தவா் உதயகுமாா்(30). விவசாய கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை மாலை தனது சகோதரா் வரணிக்குமாருடன் செந்துறையில் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த அவா்களது உறவினா்கள் சாமிநாதன் (50), இவரது மகன் நித்திஷ்குமாா் (22) மற்றும் கல்லங்குறிச்சியைச் சோ்ந்த ஜெயசூா்யா(22), பிரேம்நாத் (23), அம்மாகுளம் கிராமத்தைச் சோ்ந்த கனகராஜ் (28) ஆகிய 5 பேரும் சோ்ந்து முன்விரோதம் காரணமாக உதயகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இதில் ஆத்திரமடைந்த நித்திஷ்குமாா் உதயகுமாரை கத்தியால் குத்தியுள்ளாா். இதை தடுக்க வந்த உதயகுமாா் தரப்பைச் சோ்ந்த கிருஷ்ணகுமாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த உதயகுமாா் செந்துறை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து உதயகுமாா் அளித்த புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சாமிநாதன்
பிரேம்நாத்
நித்திஷ்குமாா்
கனகராஜ்