காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்
குளித்தலை காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
குளித்தலை காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றுக்குள் சிலர் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் வந்தது. காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்றதைக் கண்ட மணல் கடத்தும் கும்பல் லாரியை விட்டு விட்டு தப்பியோடினர். லாரியை பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய மணல் கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.