மோப்ப நாய்ப் படையில் புது வரவு
கரூர் மாவட்ட மோப்ப நாய்ப்படையில் லேபர் டாக் இனத்தைச் சேர்ந்த லக்கி என்ற புதிய நாய்க்குட்டி சனிக்கிழமை சேர்க்கப்பட்டது.
கரூர் மாவட்ட மோப்ப நாய்ப்படையில் லேபர் டாக் இனத்தைச் சேர்ந்த லக்கி என்ற புதிய நாய்க்குட்டி சனிக்கிழமை சேர்க்கப்பட்டது.
கரூர் மாவட்டக் காவல் நிலைய எல்லைகளில் நடைபெறும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மோப்ப நாய்ப்படை இயங்கி வருகிறது. இந்தப் படையில், கோவை நாய்ப்படை பயிற்சி மைதானத்தில் 6 மாதங்கள் பயிற்சி பெற்ற லேபர் டாக் இனத்தைச் சேர்ந்த லக்கி என்ற நாய்க்குட்டி சனிக்கிழமை சேர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லக்கி நாய்க்குட்டியுடன் அதன் பராமரிப்பு மற்றும் பயிற்சியாளர்கள் குழந்தைவேல், அனிப் ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரனை சனிக்கிழமை சந்தித்து பணிக்கு அறிக்கை செய்தனர்.
நிகழ்வின் போது, கரூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருள்மொழி அரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.