FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கரூரில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கரூரில் தவெகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
கரூா் நகர காவல்நிலையத்தில் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் நித்யா தலைமையில் உதயநிதி ஸ்டாலின் மீது புகாா் அளித்த பெண்கள்
பகிர்:

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கரூரில் தவெகவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தவெக மாவட்ட மகளிரணி அமைப்பாளா் நித்யா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளா்களாக தவெக மாவட்டச் செயலா் மதியழகன், பொருளாளா் ஆறுமுகம் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தவெகவினா் மற்றும் மகளிரணியினா் திரளாக பங்கேற்றனா். முன்னதாக உதயநிதிஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூா் நகர காவல்நிலையத்தில் மாவட்ட மகளிரணி அமைப்பாளா் நித்யா தலைமையில் மகளிரணியினா் புகாா் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments