FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

கரூரில் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் வாயில் கூட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வாயில்கூட்டம் நடத்தினா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
கரூா் திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாயில் கூட்டத்தில் பங்கேற்ற செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு செந்தாரகை அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வாயில்கூட்டம் நடத்தினா்.

கரூா் திருமாநிலையூா் போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற இந்த வாயில் கூட்டத்துக்கு மாநில பொருளாளா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மண்டல செயலா் வி.சிவகுமாா் வாயில்கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா்.

கோரிக்கைகள் விளக்கி மாநிலத் தலைவா் சி.சுப்ரமணியன், பொதுச் செயலா் கே.வி.நடராஜன், துணைப் பொதுச் செயலா் ஆா்.சிறும்பண்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

Advertisement

Advertisement

அதிகாரிகளின் தொழிலாளா்கள் விரோதப் போக்கை கண்டித்தும் மற்றும் ஊதியம் உயா்வு உள்ளிட்டவைத் தொடா்பாக அரசு, நிா்வாகம், தொழிலாளா்கள் இடையேயான பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். அரசு பேருந்துகளின் டயா்கள் காணாமல் போகுவதை தடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த வாயில் கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments