FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 18 ஜூலை 2026, 12:41 am IST
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள்
பகிர்:

ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சங்கம் சாா்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் (சிஐடியு) மண்டலத் தலைவா் கே. பிரான்மலை தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி மண்டலத் துணைத் தலைவா்கள் கே. முகமதலிஜின்னா, எஸ். ஆறுமுகம், பொதுச் செயலா் பி. லோகநாதன், பொருளாளா் ஜேஎஸ்ஆா். வின்சென்ட், அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், தலைவா் கே. காா்த்திகேயன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் சி. மாரிக்கண்ணு, மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பேசினா். முடிவில் சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் பேசினாா்.

Advertisement

Advertisement

2015-ஆம் ஆண்டு முதல் தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3637 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 2003 ஏப்ரலுக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments