கரூரில் அடுத்தடுத்த வீடுகளில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு
கரூரில் அடுத்தடுத்து இருவீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூரில் அடுத்தடுத்து இருவீடுகளின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கரூா் வெண்ணைமலையைச் சோ்ந்தவா் ராமசாமி. இவா், தனது குடும்பத்தினருடன் ஜூலை 9-ஆம்தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு மண்மங்கலத்தில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றாா்.
பின்னா் பிற்பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ஏழே முக்கால் பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதேபோல ராமசாமியின் பக்கத்துவீட்டைச் சோ்ந்த கணேசனும் ஜூலை 9-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வாங்கலில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீட்டுக்கு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பீரோவில் இருந்த பன்னிரன்டரை பவுன் நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ராமசாமி மற்றும் கணேசன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இரவு வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, இருவரின் வீடுகளிலும் புகுந்து நகையை திருடிச் சென்றவா்களை அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சி மற்றும் கைரேகை பதிவையும் வைத்து தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.