FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

முதல்வா் குறித்து அவதூறு: திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு நிா்வாகி கைது

தமிழக முதல்வா் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:43 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தமிழக முதல்வா் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த பரளியைச் சோ்ந்தவா் தவமணி(41). மாற்றுத்திறனாளியான இவா் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகியாக உள்ளாா். இவா், தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் கடந்த 10-ஆம்தேதி கரூரில் நடைபெற்ற மக்கள சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதை அவதூறாக சமூகவலைதளங்களில் பதிவிட்டாராம்.

இதுகுறித்த குளித்தலை தவெக மேற்குநகரச் செயலா் விஜய் அளித்த புகாரின்பேரில் குளித்தலை காவல்நிலைய ஆய்வாளா் சரவணன், தவமணியை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை ஜாமீனில் விடுவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments