குரும்பலூரில் குறுவட்ட அளவிலான கால்பந்துப் போட்டி
குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கால்பந்துப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
குரும்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான கால்பந்துப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் த.கஜபதி தொடக்கி வைத்தார். 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியின் நடுவர்களாக பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ.தனபாலன், ஸ்டான்லி, என்.கவிதா, தங்கவேல் ஆகியோர் செயல்பட்டனர். இதில் 19, 17 வயதுக்குள்பட்டோருக்கான போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணிவிகள் முதலிடமும், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்றனர்.
14 வயதுக்கானோர் பிரிவில் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடமும், குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பெற்றனர். தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆலம்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இணைச் செயலர் சே.அதியமான், உதவித் தலைமை ஆசிரியர் அ.ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் கா.குருசாமி, பள்ளி செயலர் மு.ஜோதிவேல், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.