FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 8-இல் ரேஷன்  குறைதீர் முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் செப். 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் செப். 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
    பெரம்பலூர் (தெற்கு) கிராமத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் ச. மனோகரன்,  குன்னம் வட்டம், நன்னை (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பெ. ஜெயராமன்,  வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் டி. மஞ்சுளா மற்றும் ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் ந. ராமலிங்கம் தலைமையிலும் சனிக்கிழமை (செப்.8 ) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் கண்டராதித்தம், வெண்மான்கொண்டான் (மே), நக்கம்பாடி, விளந்தை (வ) ஆகிய 4 கிராமங்களில் ரேஷன் குறைதீர்க் கூட்டம் செப். 8 ஆம் தேதி நடைபெறுகிறது. வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது  என ஆட்சியர் மு. விஜயலட்சுமி  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments