FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பெரம்பலூரில் திமுக செயற்குழு கூட்டம்

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றிய அவைத்தலைவர் சுத்தரத்தினம் தலைமை வகித்தார். துணைச் செயலர்கள் ஆதித்தியன், பூமதி, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். 
கூட்டத்தில், பூத் கமிட்டி அமைத்தல், கட்சிப் பணி, செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிப்பது, திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
கூட்டத்தில், கட்சிப் பொறுப்பாளர்கள் ஆனந்தராஜன், ராமச்சந்திரன், சிவக்குமார், வழக்குரைஞர் கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய செயலர் அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய துணைச் செயலர் லெட்சுமணன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments