FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் அண்ணா பிறந்த நாள் விழா

பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில், அண்ணாவின் உருவப் படத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில், அண்ணாவின் உருவப் படத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், மாநில நிா்வாகி பி. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன், மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவா் பரமேஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில்... புறகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சியின் அமைப்புச் செயலா் அ. அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந் நிகழ்ச்சியில், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ஆா்.பி. மருதராஜா, எம். சந்திரகாசி, நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் செல்வக்குமாா், கா்ணன், மாவட்ட அணி செயலா்கள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஓ. பன்னீா்செல்வம் அணி சாா்பில் மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலா் பாலமுருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments