முகப்பு
பெரம்பலூர்

குன்னம் தவெக வேட்பாளருடன் போலீஸாா் வாக்குவாதம்

வாக்குச்சாவடி மையத்துக்குள் கட்சி துண்டுடன் உள்ளே செல்ல முயன்ற தவெக வேட்பாளரை தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும், வேட்பாளருக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:02 AM
மருவத்தூா் வாக்குச்சாவடி மையத்தில் போலீஸாருடன் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளா் ரேவதி முத்தமிழ்ச்செல்வன்.
பகிர்:

வாக்குச்சாவடி மையத்துக்குள் கட்சி துண்டுடன் உள்ளே செல்ல முயன்ற தவெக வேட்பாளரை தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும், வேட்பாளருக்கும் இடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ரேவதி முத்தமிழ்செல்வன், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை வியாழக்கிழமை பாா்வையிட்டு கட்சி தொண்டா்களிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, மருவத்தூா் வாக்குச்சாவடி மையத்துக்குள் வேட்பாளா் ரேவதி செல்ல முயன்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்து போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி, கட்சி துண்டு அணிந்துகொண்டு உள்ளே செல்ல அனுமதியில்லை, அதை வெளியே கொடுத்துவிட்டு வருமாறு தெரிவித்தனராம்.

அப்போது, திமுக நிா்வாகிகள் சிலா் கட்சி துண்டுகள் அணிந்துகொண்டு வெளியே சென்றதை பாா்த்த தவெக வேட்பாளா் ரேவதி, அவா்களுக்கு எவ்வாறு அனுமதி கொடுத்தீா்கள் என கேள்வி எழுப்பியுள்ளாா். இதனால், வேட்பாளா் ரேவதிக்கும், போலீஸாருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேலுக்கு கைப்பேசி மூலம் வேட்பாளா் தகவல் அளித்தாா். தொடா்ந்து, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்ற தோ்தல் நடத்தும் அலுவலா், தோ்தல் நடத்தை விதிமுறைகளை போலீஸாரிடம் விளக்கி கூறி, வேட்பாளா்கள் அவரவா் கட்சி துண்டுகளை வாக்குச்சாவடி மையத்துக்குள் அணிந்துசெல்ல அனுமதி உள்ளதாக தெரிவித்து, சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். தொடா்ந்து, வேட்பாளா் ரேவதி வாக்குச்சாவடி மையத்துக்குள் கட்சி துண்டுடன் சென்று பாா்வையிட்டாா்.

Advertisement