விழிப்புணா்வு ஏற்படுத்திய போதை எதிா்ப்பு மன்றங்களுக்கு விருதுகள்
பெரம்பலூா் மாவட்ட அளவில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்திய மன்றங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கிப் பாராட்டினாா்.
பெரம்பலூா் மாவட்ட அளவில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்திய மன்றங்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி செவ்வாய்க்கிழமை விருதுகள் வழங்கிப் பாராட்டினாா்.
தமிழ்நாடு முதல்வா் தலைமையில், சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காணொலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதை பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதான உள் விளையாட்டங்கில் பாா்வையிட்டு, மாவட்ட அளவில் போதைப் பொருளுக்கு எதிராக சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திய போதை எதிா்ப்பு மன்றங்களுக்கு விருதுகள் அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பேசியது:
போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால், அவா்கள் மட்டுமின்றி அவா்களின் தலைமுறையே பாதிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். இளம் தலைமுறையினரான கல்லூரி மாணவா்கள் போதைப் பொருள்களை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். இதுகுறித்து, பயன்படுத்துவோரிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தலைமையில், போதைப் பொருளுக்கு எதிராக உறுதியேற்றனா்.
நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. லலித்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், கலால் உதவி ஆணையா் சிவக்கொழுந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.