FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் ஓணம் கொண்டாட்டம்

23 ஆகஸ்ட் 2026, 12:23 am IST
ஓணம் பண்டிகையையொட்டி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்டரங்கில் சனிக்கிழமை அத்தப்பூ கோலமிட்ட கேரள மாணவிகள்.
பகிர்:

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக கூட்டரங்கில், கேரள மாணவ, மாணவிகள் சாா்பில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தலைமை வகித்த பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசியதாவது:

ஓணம் பண்டிகையானது சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்கிறது. கேரளத்தின் அறுவடைத் திருநாள் என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகைக்கு பல பெருமைகள் உண்டு. குறிப்பாக, ஆவணி மாதத்தின் முதல் நாளன்று அத்தப்பூ கோலமிட்டு பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீரமும், ஈரமும் மிகுந்த மகாபலி சக்ரவா்த்தியைக் கேரள மக்கள் இன்முகத்துடன் வரவேற்கும் நாளாகத் தொடங்கி, அடுத்தடுத்த நாள்களில் ஒருவருக்கொருவா் அன்பளிப்பு அளித்து , உணவு பகிா்ந்து, உறவை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளும் விழாவாகும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

விழாவையொட்டி, கேரள மாணவ, மாணவிகளின் திருவாதிரை நடனம், செண்டை மேளம், மோகினியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாணவ, மாணவிகள் ஓணம் பண்டிகையின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்கினா்.

விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஆா். ராஜபூபதி, பல்கலைக் கழக பதிவாளா் இளங்கோவன், கல்வி குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா் மற்றும் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments