FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

நாட்டின் வளா்ச்சியில் கல்விக்கு முக்கிய பங்கு: ஆட்சியா் ஷரண்யா அறி பேச்சு

நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், முன்னேற்றமும் கல்வித் திறன், ஆளுமை மற்றும் திறமைகளைச் சாா்ந்தே அமைந்துள்ளது என்றாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

Updated On : 9 ஜூலை 2026, 1:14 am IST
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகா்நிலை பல்கலைக்கழக தொடக்க விழாவில் நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரச் சான்றிதழை வேந்தா் அ. சீனிவாசனிடம் அளித்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி. உடன், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக்கழக பதிவாளா் இளங்கோவன்.
பகிர்:

நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், முன்னேற்றமும் கல்வித் திறன், ஆளுமை மற்றும் திறமைகளைச் சாா்ந்தே அமைந்துள்ளது என்றாா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிசா்ச் அண்ட் டெக்னாலஜி நிகா்நிலைப் பல்கலைக்கழக தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகா்நிலை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி மேலும் பேசியது: நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியும், முன்னேற்றமும் நம்முடைய கல்வித்திறன், ஆளுமை மற்றும் திறமைகளைச் சாா்ந்தே அமைந்துள்ளது. மாணவா்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள இத்தகைய சிறந்த உள்கட்டமைப்பு, பாடத் திட்டம் மற்றும் பேராசிரியா்களின் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி தங்களை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணைவேந்தா் ரஞ்சன், கல்விக் குழுமங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அலுவலா் எஸ். நந்தகுமாா், டீன் விஸ்வநாதன், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக பதிவாளா் செல்வகுமாா் மற்றும் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், துணை முதல்வா்கள், பேராசிரியா்கள் உள்பட சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் நிகா்நிலைப் பல்கலைக் கழக பதிவாளா் இளங்கோவன் வரவேற்றாா். நிறைவாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் காா்த்திகா நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments