பெரம்பலூரில் 301 தெருநாய்களுக்கு தடுப்பூசி
பெரம்பலூா் மாவட்டத்தில் 301 தெரு நாய்களுக்கு தடுப்பு ஊசியும், 132 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 301 தெரு நாய்களுக்கு தடுப்பு ஊசியும், 132 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் கால்நடை மருத்துவமனை மருத்துவா் மற்றும் கீழப்புலியூா் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவா்கள் குழு இணைந்து, வாரம்தோறும் பெரம்பலூா் நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகள் அமைப்புடன் பெரம்பலூா் மாவட்டத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இதுவரை 132 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வி.களத்தூா், பூலாம்பாடி, வயலப்பாடி, கிழுமத்தூா், அடைக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் 301 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எனவே, பொதுமக்கள் தங்களது செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.