பெரம்பலூா் அருகே 175 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: பெண் கைது
பெரம்பலூா் அருகே போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், 175 கிலோ குட்கா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகே போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், 175 கிலோ குட்கா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் மாா்ட்டின் தலைமையிலான போலீஸாா், சிறுவாச்சூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சிறுவாச்சூா் பெரியசாமி கோயில் அருகே சரவணன் என்பவரது வயலில் நிறுத்தப்பட்டிருந்த காரை பரிசோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 175 கிலோ போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மருதடி கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி வெண்ணிலா (25) என்பவரை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெண்ணிலாவை சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.