புகையிலை பொருள்கள் விற்ற கடைகளுக்கு ‘சீல்’
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சனிக்கிழமை சீலிடப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு சனிக்கிழமை சீலிடப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா், கவுள்பாளையம், அருமடல் மற்றும் லாடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன் தலைமையிலான அலுவலா்கள் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசால் தடைசெய்யப்பட்ட 14 கிலோ எடையிலான உணவு கலந்த புகையிலை மற்றும் ஹான்ஸ், கூலிப், பான்மசாலா, குட்கா ஆகிய போதைப் பொருள்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து கடைகள் பூட்டப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்றவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் 94440-42322 எனும் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம் என, உணவுப் பாதுகாப்புத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.